அண்ணாத்த இரவு – பகலாக படப்பிடிப்பு, ரஜினி மகள் சவுந்தர்யா நிராகரிப்பு?

341

அண்ணாத்த 3ம் கட்டமாக சமீபத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜனி தனி விமானத்தில் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தற்போது கொரோனாவின் இரண்டாது அலை காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை தெலுங்கானா அரசாங்கம் கொண்டு வர உள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் மாதக் கணக்கில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் தற்போது ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அவசர அவசரமாக படமாக்கி வருகிறார்கள் அண்ணாத்த டீம். ரஜினியை அதிகம் சிரமப்படுத்தாமல் காட்சிகளை எடுத்து வருகிறார்களாம். இரவு காட்சி எடுக்கவேண்டி உள்ளதால் அதற்கு ரஜினியின் மகள் சவுந்தர்யா சம்மதிகவில்லையாம். படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.