ஒரு தலைவன் இப்படித்தான் இருக்கவேண்டும் இப்படியும் இருந்துருகிறார்கள் என்பதை கண்முன் நிறுத்திய திரைப்படம் “தண்டேல்”
நடிகர் நாக சைதன்யா நடிகை சாய் பல்லவி நடிப்பில் தண்டேல்,கருணாகரன்,பப்லு
மற்றும் பலர் நடித்துள்ளனர்,ஶ்ரீகாகுளம் என்கிற சிறிய கிராமத்தை சேர்ந்த மீனவர் ராஜூ (நாக சைதன்யா) ராஜூ மற்றும் சத்யா (சாய் பல்லவி) இருவரும் காதலித்து வருகிறார்.
கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது ராஜூவின் தொழில். வருடத்தில் பெரும்பாலான மாதங்களை கடலில் கழிக்கும் ராஜூ மிச்சமிருக்கும் கொஞ்ச நாட்களை தனது காதலியுடன் மகிழ்ச்சியான நாட்களாய் செலவிடுகிறார்.
எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு நிகழ்விற்கு பின் ராஜூவை இனி கடலுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார் சத்யா. ஆனால் அவள் பேச்சை கேட்காமல் ராஜூ கடலுக்குள் செல்கிறான். கடலுக்குள் சென்ற ராஜூவின் குழு புயலில் மாட்டிக் கொள்கிறது. பின் பாகிஸ்தான் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் ராஜூவும் அவனது குழுவும் சந்தித்த கொடுமைகள், காதலனை பிரிந்து இருக்கும் சத்யா எதிர்கொள்ளும் சவால்கள் டெல்லி வரை சென்று விடுதலைக்காக போராடும் விதம் என தொடர்கிறது படம். சத்யா மற்றும் ராஜூ இருவரும் எப்படி சேந்தார்கள் என்ன நடந்தது என்பதே தண்டேல் படத்தின் மீதி கதை.
இந்தியா பாகிஸ்தான் நல்லுறவும் பிரிவினை வாதிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை காட்சிகளாக பிரமிக்க வைத்துள்ளார் இயக்குனர்,தேசப்பற்று நிறைத்த படமாக இருக்கிறது,கருணாகரன்,ஆடுகளம் நரேன் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர்,கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளார்.
காதல் காட்சிகள் உணர்வு, பாசம் மற்றும் அவரது பாடல் அனைத்தும் நன்றாக உள்ளது,நடிகர் நாக சைதன்யா சாய் பல்லவி மிக நன்றாக நடித்துள்ளார் சண்டை காட்சிகள் அற்புதம் . கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி,ஓம் நமசிவாய பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது அப்பாடல் மிக நன்றாக உள்ளது சாய் பல்லவியும் நாகச் சைதன்யாவும் மிக நன்றாக நடனமாடியுள்ளனர்,ஆக்சன் காதல் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
படத்தின் முடியும் உண்மை சம்பவத்தில் அடிப்படையில் நடைபெற்ற காட்சிகள் ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
நடிகர்கள் :
நாக சைதன்யா – ராஜு
சாய் பல்லவி – சத்யா
பிரகாஷ் பெலவாடி – பாகிஸ்தான் சிறை அதிகாரி
திவ்யா பிள்ளை – சந்திராக்கா
ராவ் ரமேஷ்
கருணாகரன்
‘ஆடுகளம்’ நரேன்
பப்லு பிருத்விராஜ்
மைம் கோபி
கல்ப லதா
கல்யாணி நடராஜன்
மகேஷ் அச்சந்தா
கிஷோர் ராஜு வசிஷ்டா
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து & இயக்கம் : சந்து மொண்டேட்டி
ஒளிப்பதிவு : ஷ்யாம் தத் ( ISC)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
படத்தொகுப்பு : நவீன் நூலி
கதை : கார்த்திக் தீடா
தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ்
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்